1330திருக்குறள் பரப்புரை நிறைவு செய்த மாணவியை பாராட்டிய உலக சாதனையாளர்

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை ஏலாக்கரை பகுதியை சார்ந்த ஜோணி அமிர்த ஜோஸ் ஸ்மிதா இவர்களின் இளைய மகள் ஜோ.ஸ்.தீக்ஷா என்பவர் நித்திரவிளை கிறிஸ்துராஜபுரம் ஜெயமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் 10-02-2021 முதல் தினம் ஒரு திருக்குறள் என்னும் தலைப்பில் தினம் ஒரு திருக்குறள் சொல்லி காணொளியை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து பரப்புரை செய்து வந்தார். அப்போது இவரது வயது 9 ஆகும்.இவரது திருக்குறள் காணொளிகளை புலனம் வாயிலாக தனி நபர்களும் திருக்குறள் அமைப்புகளும் திருக்குறள் ஆர்வலர்களும் பரப்புரை செய்து வந்தனர். திருவள்ளுவர் தினமான ஜனவரி 15 ஆம் தேதி 1330 வது திருக்குறளை நிறைவு செய்தார்.இவரது சிறுவயது சாதனையை பாராட்டி நித்திரவிளை ஜோஸ் திரஜ்பண்பாட்டுசேவாஅறக்கட்டளையை சார்ந்த உலக சாதனையாளர் கலை இளமணி ஜோ.ஸ். தீரஜ் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டினார். மேலும் நித்திரவிளை பகுதியை சேர்ந்த பொறியாளர் பெபின் ரமேஷ் மாணவியின் வீட்டிற்கு நேரில் வந்து பயனாடை அணிவித்து பாராட்டினார்.நித்திரவிளையை சார்ந்த கவிஞர் சந்தோஷ் முரசங்கோட்டை சார்ந்த கவிஞர் வி.யேசுராஜ் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த கவிஞர் வங்கனூர் சீனிவாசன் ஆகியோர் காணொளி வாயிலாகவும் மற்றும் பலர் புலனம் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்து மாணவியை பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

1330திருக்குறள் பரப்புரை நிறைவு செய்த மாணவியை பாராட்டிய உலக சாதனையாளர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி