சென்னை மாநகரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பயன்படுத்தப்படவுள்ள
1800 பயோ மெட்ரிக் கருவிகளின் செயல்பாடுகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்
ஜெ.இராதாகிருஷ்ணன், இன்று (14.07.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் பார்வையிட்டார். உடன் நுகர்பொருள் வாணிபக் கழக ஆணையாளர் ராஜாராமன், கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி)) ஆர்.லலிதா, இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், உதவி ஆணையாளர் (பொ.நி.(ம)ப.) சூரியபிரகாஷ் மற்றும் பணியாளர்கள் உடன்யிருந்தனர்.







