தங்கவிலையை தாண்டுமோ தக்காளி விலை? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே தக்காளி விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

அதன் பின்னர் மாநில அரசு நடவடிக்கை எடுத்து பசுமை பண்ணை கடைகள் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விற்பனை செய்ய தொடங்கியது. அதன் காரணமாக ரூபாய் 90 வரையிலும் தக்காளி விலை குறைந்தது.

தற்போது மீண்டும் பல மாநிலங்களில் கனமழை தொடங்கியுள்ள நிலையில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ள நிலையில், மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

1200 டன் தக்காளிகள் தேவை என்கிற நிலையில் 400 டன் தக்காளி மட்டுமே கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இன்று வந்தன. அதன் காரணமாக நேற்று 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, இன்று ஒரே நாளில் ரூபாய் 30 உயர்ந்து ரூ.140க்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது.

இரண்டாம் ரகத் தக்காளி 130 ரூபாய்க்கும், மூன்றாவது ரக தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் இதர பகுதிகளிலும் 100 ரூபாயைத் தாண்டியே மொத்த விலையில் தக்காளி விற்கப்படுகிறது

சந்தைகளில் இருந்து தக்காளி வாங்கிச் சென்று விற்பனைச் செய்யும் இறுதி வியாபாரி தங்களது கடைகளில் அதிகபட்சமாக ரூபாய் 170 வரையிலும் விற்று வருகின்றனர்.இதனால் கடும் அதிர்ச்சியடைந்த இல்லத்தரசிகளில் பெரும்பாலானோர் தக்காளி இல்லாத சமையலுக்கு பழகி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

தங்கவிலையை தாண்டுமோ தக்காளி விலை? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச