காணாமல் போன சிறுவர்களை ட்ரோன் மூலம் தேடும் பணி தீவிரம் – நீலகிரியில் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பழங்குடியின சிறுவர்களான இருவர் காணாமல் போனதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சிறார்களை தேடிய போலீசார் வனப்பகுதிக்குள் சிறுவர்கள் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், டிரோன் மூலம் முதுமலை வனப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வனத்துறையினர் மற்றும் காவல் நக்சல் தடுப்பு பிரிவினர் குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஓடக்கொல்லி பகுதியை சேர்ந்த பழங்குடியின தம்பதி கடந்த மாதம் 29-ம் தேதி தேன் எடுப்பதற்காக முதுமலை வனப்பகுதிக்குச் சென்றனர். அப்போது தங்களின் 5 வயது மகன், 10 வயது மகள் ஆகியோரை உறவினர்களிடம் விட்டுச்சென்றனர். இதையடுத்து 30ம் தேதி முதல் தம்பதியின் பிள்ளைகளான 2 சிறுவர்களையும் காணவில்லை. இதனால் 2 சிறுவர்களையும், குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பழங்குடியின மக்கள் பல இடங்களுக்கு சென்று தேடியும் காணவில்லை. ஆனால் 2 நாட்களாகியும் சிறுவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கூடலூர் காவல்துறை மற்றும் முதுமலை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இது தொடர்பாக கூடலூர் காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.

மேலும் பெற்றோர் தேன் எடுக்க முதுமலை வனப்பகுதிக்குள் சென்றதால் அவர்களை தேடி 2 சிறுவர்களும் வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என காவல்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் சந்தேகித்து சிறுவர்களை வனப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று கூடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், ஆய்வாளர் சாகுல் ஹமீது, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர்
55 பேர் 6 பிரிவுகளாக பிரிந்து முதுமலை வனப்பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இன்று .டிரோன் மூலம் ஓடக்கொல்லி மற்றும் முதுமலை வனப்பகுதியில் சுமார் 8 கி.மீ தூரம் வானில் பறக்கவிட்டு தேடும் பணி நடைபெற்றது. அதேப்போல் வனத்துறையினர், காவல் நக்சல் தடுப்பு பிரிவினர் குழுக்களாக பிரிந்து தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

காணாமல் போன சிறுவர்களை ட்ரோன் மூலம் தேடும் பணி தீவிரம் – நீலகிரியில் பரபரப்பு…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65