ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியர் பலி…

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தீரஜ்குமார் (வயது 32). இவர் தெற்கு ரெயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர், பணி நிமித்தமாக சென்டிரலில் இருந்து மின்சார ரெயிலில் அண்ணனூர் சென்று கொண்டிருந்தார். இவர் ரெயில் பெட்டியின் வாசலில் கதவு அருகே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மின்சார ரெயில், பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் வந்தபோது தீரஜ் குமார் திடீரென ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முற்பட்டார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், நடைமேடைக்கும், மின்சார ரெயில் பெட்டிக்கு இடையில் அவரது ஒரு கை மற்றும் ஒரு கால் சிக்கி கொண்டது. கை மற்றும் காலை எடுக்க முயன்றபோதும் அவரால் முடியவில்லை. இதனால், அவர் வலியால் அலறித்துடித்தார். தொடர்ந்து ரெயில் நிற்காமல் சென்று கொண்டிருந்ததால் கை மற்றும் கால் முழுவதுமாக துண்டானது. இதைப்பார்த்த பயணிகள் ஓடிவந்து அவரை தூக்க முற்பட்டனர். ஆனால், அவரை மீட்க முடியாமல் சிரம்மபட்டனர். இதுபற்றி அங்கிருந்த ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ரெயில்வே போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி தீரஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியர் பலி…

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு