ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியர் பலி…

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தீரஜ்குமார் (வயது 32). இவர் தெற்கு ரெயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர், பணி நிமித்தமாக சென்டிரலில் இருந்து மின்சார ரெயிலில் அண்ணனூர் சென்று கொண்டிருந்தார். இவர் ரெயில் பெட்டியின் வாசலில் கதவு அருகே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மின்சார ரெயில், பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் வந்தபோது தீரஜ் குமார் திடீரென ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முற்பட்டார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், நடைமேடைக்கும், மின்சார ரெயில் பெட்டிக்கு இடையில் அவரது ஒரு கை மற்றும் ஒரு கால் சிக்கி கொண்டது. கை மற்றும் காலை எடுக்க முயன்றபோதும் அவரால் முடியவில்லை. இதனால், அவர் வலியால் அலறித்துடித்தார். தொடர்ந்து ரெயில் நிற்காமல் சென்று கொண்டிருந்ததால் கை மற்றும் கால் முழுவதுமாக துண்டானது. இதைப்பார்த்த பயணிகள் ஓடிவந்து அவரை தூக்க முற்பட்டனர். ஆனால், அவரை மீட்க முடியாமல் சிரம்மபட்டனர். இதுபற்றி அங்கிருந்த ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ரெயில்வே போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி தீரஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியர் பலி…

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு