கோவை:
திமுகவின் இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சனாதனம் என்பது தேவையற்றது. அதனை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் போஸ்டரை வாலால் குத்தி எரித்ததோடு அவரது தலைக்கு ரூ.10 கோடி என்று விலை நிர்ணயம் செய்தார். இந்த காட்சி இந்தியா முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இந்த சாமியன் கொடும்பாவியை எரித்து திமுகவினர் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தினர். மேலும் கொலை வெறியை தூண்டும் வகையில் சாமியார் பேசியதாகவும், அவரது செயல் இருந்ததாகவும் கூறி பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.
அதே நேரத்தில் சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகிறது. கோவையில் இந்த சண்டை ஒருபடி மேலே போய் போஸ்டர் வரை வந்துள்ளது.
அதாவது திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் போலி சாமியாரே 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம். என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜக சார்பில் சனாதனம் எங்கள் உயிர் மூச்சு என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





