சென்னை:
சென்னை உட்பட தருமபுரி, செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட 30 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டவ கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை, தருமபுரி, செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், திருவள்ளூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சை, திருவாரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 30 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னதுடன் வேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 31- 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியளை ஓட்டியும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.







