பொறியில் குணம்இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
குறள் விளக்கம்: நாம் நினைத்தவுடனேயே நம் உள்ளத்தில் வீற்றிருக்க வருகின்ற எளிமையுடைய இறைவனின் அடிகளை வணங்காதவர்களின் தலை உணர்வற்ற பொறிகள் போல பயனற்றதாகும்.
திருமறை விளக்கம்: அவ்வாறே திருமறையும் மத்தேயு 3:48பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிக்கிறதுபோல. நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” எனவும் ரோமர் 1:22 “அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகினர் என்றும், ரோமர் 1:21 * உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது” எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதைக் காண்கிறோம்






