சுகமெனக் கிடந்தால் பாம்பிற்கு வலையே..
சுமையில்லை யென்றால் நத்தைக்கு உடலே..
அழுக்கில்லை யென்றால் எருமைக்கு சேறே..
அலுப்பில்லை என்றால் கழுதைக்கு சுமையே..
நிறைவில்லை யென்றால் கிடைத்ததில் மகிழ்வே..
நிம்மதி கொள்ளும் மனம் அதுதரவே!
அடியில்லை யென்றால் ஆசைக்குள் செயலே!.
அக்கரை யென்றால் காத்திடல் வழியே..
நினைத்தால் எல்லாம் நிறைபட சுகமே..
நீந்தும் மனதிற்கு கவலைகள் விடலே!..
சோதனை காலத்தில் நிலைப்பதும் சுகமே..
சுற்றங்கள் கடிய விழித்தெழல் சுகமே!
வழியை அறிந்தால்.. வாழ்க்கையும் சுகமே..
வளர வளர வரும் புது சுகமே!
எண்ணங்கள் நிறைந்தால்.. இன்பமும் சுகமே
ஏற்றங்கள் பாட உழைப்பதும் சுகமே!
கட்டில் விட்டு நலம்பெறல் சுகமே..
காணும் பலவும் கனிந் திட சுகமே!
சுகமே.. சுகமே.. சுகம்பட பாடல்
சுற்றுச்சூழலை நன்கு அறிதல்
புரிதலோடு புதுப்புது ஆடல்
புகுந்து எழுந்து நீந்தி வினையாடல்!
பாவலர் மு இராமச்சந்திரன்
தலைவரா
தமிழர் தன்னுரிமைக் கட்சி.




