தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் வேண்டுகோள்
சென்னை போரூர் அடுத்த மதனந்தபுரம் சமூக நல்லிணக்க வள்ளுவர் கூடத்தில் புனித தோமா புகழ் 2026 விழா இந்திய ஆன்மீக விடுதலை இயக்கம் தமிழ்நாடு மற்றும் ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் ஊழியர் ஐக்கியம் இணைந்து நடத்தியது இவ்விழாவிற்கு இந்திய ஆன்மீக விடுதலை இயக்கம் தலைவர் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மும்பையை சேர்ந்த பேராயர் செல்வின் CEFI அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார் இவ்விழாவில் பொதுச் செயலாளர் வில்லியம்ஸ், பொருளாளர் முல்லைத் தமிழன், கலை இலக்கியத் தலைவர் தன்ராஜ், மாநில செய்தி தொடர்பாளர் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் இருதயராஜ் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து விழாவில் கலந்து கொண்டு புனித தோமா அவர்களின் புகழை எடுத்துரைத்து பேசினார்கள் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய ஆன்மீக விடுதலை இயக்கம் தலைவர் இறைமொழியன் லூர்துசாமி அவர்கள் பேசுகையில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எங்களின் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார் அதே வேளையில் இன்று புனித தோமா அவர்களின் புகழ் விழா 2026 என்ற நிகழ்ச்சி இன்று இங்கு நடைபெற்றது அதே வேளையில் தமிழக முதல்வருக்கு நாங்கள் கோரிக்கையும் வைக்கின்றோம் புனித தோமா அவர்களுக்கு சென்னையில் மணி மண்டபம் கட்டிதர வேண்டும் அதேபோல் சுற்றுலாத்தலமான மகாபலிபுரத்தில் புனித தோமா அவர்களின் திருவுருவ சிலை அமைத்து தர வேண்டும் என்று தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம் என்று கூறினார் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இயக்க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதில் அனைவருக்கும் மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.







