திமுக தலைமை நிலையச் செயலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பூச்சி முருகன், தனது நண்பர்களுடன் கொடைக்கானலில் சுற்றுலா சென்றிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார். அவருடன் முன்னாள் எம்பி ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்த நிலையில், திடீர் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் காரணமாக அவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, உடனடியாக கொடைக்கானல் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவரது மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில், பூச்சி முருகனுக்குச் சென்னைக்குச் சென்று சிகிச்சை அளிப்பது சிறந்தது என அவரது குடும்பத்தினரும், திரைப்பட நடிகர் சங்க நிர்வாகிகளும் முடிவெடுத்துள்ளதால், இன்று மதியம் தனி விமானம் மூலம் அவர் மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்.

மது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாணவர்கள் அச்சம்
மது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாணவர்கள் அச்சம் தெருவில் தாறுமாறாக






