கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளாமலேயே, தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணம் விடுவிக்கப்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) கடந்த ஜூன் மாதம் வழக்குப் பதிவு செய்தது. அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரது இல்லங்கள் உட்பட பல இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், சிங்கப்பூரில் மருத்துவச் சிகிச்சை பெற்றுத் திரும்பிய எ.வ.வேலு, தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பிறப்பித்த லுக்-அவுட் நோட்டீஸ் மற்றும் எஃப்.ஐ.ஆர் ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதித்ததோடு, ஜூலை 15-ஆம் தேதியன்று விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, இந்த சாலை டெண்டர் முறைகேடு வழக்குத் தொடர்பான விசாரணைக்குத் தனது விளக்கங்களை அளித்துள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 89: உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு. விளக்கம்:ஒருவரிடம் செல்வம்






