அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் அரசியல் ஸ்டண்ட் அவ்வளவுதான்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை:
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரஃபேல் கடிகாரம் குறித்து அரசியல் ரீதியாக சர்ச்சைகள் வெடித்த நிலையில், இந்தகடிகாரத்தை வாங்கியதற்கான ரசீதை சித்திரை மாதம் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ரஃபேல் கடிகாரம் வாங்கியதற்கான ரசீதை வெளியிட்டார். மேலும், தனது வங்கி கணக்கு, சம்பள விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை, தான் அணிந்திருக்கும் ரஃபேல் கடிகாரம் பெல் அண்ட் ரோஸ் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டதாகவும், ரஃபேல் கடிகாரம் வரிசையில் 147-வது கடிகாரத்தை தான் வாங்கியதாகவும் கூறினார். «
காவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய்க்கு இந்த கடிகாரத்தை வாங்கியதாகவும் தெரிவித்தார். மாதம் 8 லட்சம் ரூபாய் செலவு செய்து வரும் நிலையில், வீட்டு வாடகை, காருக்கு பெட்ரோல் என எல்லாவற்றுக்கும் தனது நண்பர்கள்தான் உதவி வருவதாகவும் அண்ணாமலை கூறினார்.
அதைத்தொடர்ந்து ஏற்கனவே அறிவித்ததைப் போன்று திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அப்போது பேசியவர், வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல்களும் வெளியிடப்படும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பட்டியல் என்பது, அரசியல் ஸ்டண்ட் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். பாஜகவினருக்கு தொடர்புடைய பல்வேறு மோசடி புகார்கள் மீதான, மக்களின் பார்வையை திசை திரும்பும் நோக்கில், அண்ணாமலை செயல்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார். அவர், வெளியிட்ட பட்டியல் ஒரு பொருட்டே இல்லை எனவும் உதாசீனப்படுத்தியுள்ளார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் அரசியல் ஸ்டண்ட் அவ்வளவுதான்: அமைச்சர் துரைமுருகன்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட