புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ. ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதுவை மாநில பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் ராஜா தியேட்டர் அருகிலிருந்து ஊர்வலம் கிளம்பியது. பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமை வகித்தார். பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன், வெற்றிச்செல்வன், செல்வம் ஆகியோர் ஊர்வலமாக வந்து பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
புதுவை மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பா ளர் சிவா தலைமையில் பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத், துணை அமைப்பாளர்கள் தைரியநாதன், கல்யாணி கிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, சண். குமரவேல், மூர்த்தி, லோகை யன், ஜெ.வி.எஸ். ஆறுமுகம் என்கிற சரவணன், காந்தி, அருட்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் தலைமை கழகத்திலிருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்தனர். அம்பேத்கர் சாலையில் உள்ள அவரின் சிலைக்கும், பாரதிபூங்காவில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணைச் செயலாளர்கள், கருணா நிதி, கணேசன், மூர்த்தி, நாகமணி, காந்தி, கிருஷ்ணமூர்த்தி உட்படபலர் கலந்து கொண்டனர். புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





