தமிழக முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் சபாநாயகம். சென்னை ஆர்.ஏ.புரம் பிஷப் கார்டனில் வசித்து வந்தார் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101. மறைந்த சபாநாயகம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1945-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றிய அவர் 31.8.1980 அன்று ஓய்வு பெற்றார். பொள்ளாச்சி சப்-கலெக்டராக சபாநாயகம் தனது பணியைத் தொடங்கினார். முதலமைச்சராக இருந்த ராஜாஜியின் தனிச் செயலாளர், சேலம் மாவட்ட கலெக்டர் உள்பட பல முக்கிய அரசுப் பணிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டார். மத்திய அரசின் கல்வி மற்றும் கலாசார அமைச்சக செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.








