ஊரக வளர்ச்சி- ஊராட்சிதுறை சங்க ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்….

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் தமிழ்நாடு சமூக தணிக்கை சங்க ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
நீதிமன்ற உத்தரவின்படி பணி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை அரசாணை எண் 64ன்படி நியமனம் செய்ய வேண்டும். அரசாணை எண் 17ஐ ரத்து செய்ய வேண்டும். மே மாத சம்பளம் வழங்க வேண்டும். ரேன்டமிஷேசன் நீக்கி பழைய நிலையில் ஒன்றியத்தில் பணி வழங்க வேண்டும். அறிக்கை செலவின தொகை வழங்க வேண்டும்.
நிலுவையில் உள்ள பயணப்படி தொகையை வழங்க வேண்டும். வழஙகப்படாமல் உள்ள ஆறு ஆண்டு சம்பள உயர்வு வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், தமிழ்நாடு சமூக தணிக்கை சங்க ஊழியர்கள் சார்பில் சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே ஜூலை 5ம் தேதி ஒரு நாள் கவன ஈர்ப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி- ஊராட்சிதுறை சங்க ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்….

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.