புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பட்டியல் பழங்குடி மேம்பாட்டு கழகம் மூலம் PADCO நிறுவனத்தின் கீழ் 50,000 முதல் 1,00,000 ரூபாய் வரையிலான தனிநபர் கடனை திமுக துணை அமைப்பாளரும் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிபால் கென்னடி அவர்கள் பெற்றுத் தந்தார்:
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பட்டியல் பழங்குடி மேம்பாட்டு கழகம் மூலம் PADCO திட்டத்தின் கீழ் தனி நபர் கடனுக்கான தொகையின் ஆணையை உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார், ஐந்து வருட காலமாக PADCO திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதற்கான எந்த கோப்பும் ஆணையும் கையொப்பம் படவில்லை இதனால் சுயதொழில் செய்ய நினைக்கும் ஆதிதிராவிட பட்டியல் இனத்தை சார்ந்தவர்களுக்கு எந்த விதமான உறுதுணையும் இல்லை, இதை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் தொடர்ச்சியாக மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் இத்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்துக் கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து இயக்குனர் அசோகன் மற்றும் கண்காணிப்பாளர் ஆறுமுகம் அவர்களிடம் தொடர்ச்சியாக அலுவலகம் சென்று என் தொகுதிக்கு உட்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு கடன் அளித்து அவர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு அடித்தளம் வகுத்து தாருங்கள் என்று பலமுறை படி ஏறி இறங்கினார். சட்டமன்ற உறுப்பினரின் கனிவான அணுகுமுறை மற்றும் கோரிக்கைகளை ஏற்று உப்பளம் தொகுதிக்குட்பட்ட பட்டியல் இனத்தை சார்ந்த சுயதொழில் செய்ய இருக்கும் ஆர்வமுள்ள பயனாளிகளுக்கு ரூபாய் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரையிலான தனி நபர் கடன் வழங்கப்பட்டது . அதற்கான ஆணையை இன்று சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் அவர்கள் அலுவலகத்தில் வழங்கினார். ஆணையைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஐந்தாண்டு காலமாக நான் விண்ணப்பித்தும் எனக்கு கிடைக்கவில்லை தாங்கள் துரித முயற்சியால் எங்களுக்குப் பெற்று தந்ததற்கு நன்றி என்று நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். உடன் அவைத்தலைவர் ஹரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, திமுக பிரமுகர் நோயல், மகளிர் அணி சரஸ்வதி,விஜயா, கிளைச் செயலாளர்கள் மற்றும் கழக சகோதரர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.