RBI ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களான (RE) வங்கிகள் / NBFCகள் / கட்டண முறைப் பங்கேற்பாளர்கள் / கடன் தகவல் நிறுவனங்கள் மீதான உங்கள் புகார்களைத் தீர்க்க, இந்தப் வழிமுறைகளை பின்பற்றவும்:1️⃣ முதலில் RE- யிடம் உங்கள் புகாரைப் பதிவு செய்யவும்.
2️⃣ ஒப்புகை / குறிப்பு எண்ணைப் பெறவும்.
3️⃣ 30 நாட்களில் RE- யிடமிருந்து எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அதில் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றாலோ, உங்கள் புகாரை, RBI குறைதீர்ப்பாளரிடம், RBI-யின் CMS தளத்தில் (cms.rbi.org.in) அல்லது CRPC, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, செக்டார் 17, சண்டிகர் – 160017 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ பதிவு செய்யலாம்.
📌 RBI குறைதீர்ப்பாளரிடம் நேரடியாகப் புகார்களை அளித்தால் நிராகரிக்கப்படலாம்.






