கர்நாடக மாவட்டம், தும்பூர் மாவட்டம் மல்லனஹள்ளியில் வசித்து வருகிறார் சுதீஷ் அவருடைய மனைவி வசந்தா.இத்தம்பதியினருக்கு கடந்த 22-ம் தேதி தும்பூர் மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் ஒரு குழந்தை மருத்துவமனையிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிகிறது . மற்றொரு குழந்தை உயிர் பிழைத்தது.
இந்நிலையில் சுதீஷ் கிராம வாசிகள் மூட நம்பிக்கைக்கு முதலிடம் கொடுத்து வசித்து வருகின்றனர்.
அதாவது எந்த ஒரு பெண்ணும் குழந்தை பெற்ற உடன் உடனடியாக ஊருக்குள் வருவதற்கு அனுமதிப்படுவதில்லை. இதனால் வசந்தாவும், அவரது குழந்தையும் ஊருக்கு வெளியே ஒரு குடிசையை அமைத்து அதில் ஒரு மாதம் தங்க வைக்கப்பட்டனர். தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை மற்றும் கடுங்குளிரின் காரணமாக மற்றொரு குழந்தையும் உயிரிழந்தது. குழந்தை இறந்ததைப் பார்த்து வசந்தா கண்ணீர் விட்டு கதறி அழுதார். மூடநம்பிக்கையால் தான் தனது குழந்தை உயிரிழந்து விட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் சம்பவ நடந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மூடநம்பிக்கையால் குழந்தை பலியான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.





