அல்டிமேட் டேபிள் டென்னிஸ் : சென்னை, டெல்லி அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

புனே: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் புனேவில் உள்ள ஷிவ்சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் – தபாங் டெல்லி டிடிசி அணிகள் மோதின. இந்த மோதலில் டெல்லி தபாங் அணி 9-6 என்ற கணக்கில் சென்னை லயன்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் சத்தியன் ஞானசேகரன் 3-0 (11-10, 11-3, 11-6) என்ற செட் கணக்கில் சென்னை லயன்ஸ் அணியின் ஷரத் கமலை தோற்கடித்தார். 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணியின் யாங்ஸி லியு 2-1 (11-8, 8-11, 11-8)என்ற கணக்கில் டெல்லி அணியின் ஸ்ரீஜா அகுலாவை வீழ்த்தினார்.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் டெல்லி அணியின் சத்தியன், பார்போரா ஜோடி2-1 (11-7,11-6,7-11) என்ற கணக்கில் சென்னை அணியின் ஷரத் கமல், யாங்ஸி லியு ஜோடியை தோற்கடித்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் பெனடிக்ட் டூடா 3-0 (11-8, 11-6, 11-7) என்ற கணக்கில் டெல்லி அணியின் ஜான் பெர்சனை வீழ்த்தினார்.

கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் டெல்லி அணியின் பார்போரா 2-1 (11-6, 4-11, 11-9) என்ற கணக்கில் சென்னை அணியின் பிராப்தி ஷெனை வென்றார். இந்த ஆட்டத்தின் முடிவில் தபாங் டெல்லி 42 புள்ளிகளுடனும், சென்னை லயன்ஸ் 41 புள்ளிகளுடனும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் : சென்னை, டெல்லி அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.