Wildlife Of Tamil Naduபுத்தகம் வெளியிடும் நிகழ்வு

சுற்றுலா
துறையில் பல்வேறு புதிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்
தொடர்ச்சியாக சுற்றுலா துறை மற்றும் இந்து குழுமம் இணைந்து தயாரித்த Wildlife Of Tamil
Nadu புத்தகம் வெளியிடும் நிகழ்வு இன்று சென்னை, வாலாஜா சாலையில்
அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் நடைபெற்றது.இந்த Wildlife Of Tamil Nadu புத்தகத்தில் தமிழ்நாட்டின் கண்கவர் இயற்கை
நிலப்பரப்புகளின் காட்சிப்பூர்வமான மற்றும் கதையாடல் பயணத்தை வழங்குகிறது.
இந்நிலப்பரப்புகளை உருவாக்கும் விலங்கியல் உலகம், சூழலியல் அமைப்புகள் மற்றும்
கலாச்சார வரலாறுகளை இந்த புத்தகம் வெளிப்படுத்துகிறது.
வங்காள விரிகுடா கடற்கரையோரத்தில் புலிகாட், வேடந்தாங்கல் மற்றும் பாயிண்ட்
கலிமேர் போன்ற ஈரநிலங்கள் அமைந்துள்ளன. இங்கு ஒவ்வொரு குளிர்காலத்திலும்
இடம்பெயரும் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து கூடுகின்றன.
உள் நாட்டில், மேற்கு தொடர்ச்சி மலைகளின் காடுகள் — முதுமலை, ஆனமலை
மற்றும் களக்காடு -முண்டந்துறை போன்ற பகுதிகள் — யானைகள், புலிகள், கொக்குகள்
(ஹார்ன்பில்), மேலும் அரிய உயிரினங்களான சிங்கவால் குரங்கு மற்றும் நீலகிரி தார்
போன்றவற்றுக்கு வாழ்விடமாக உள்ளன.
இந்தப் பயணம் மன்னார் வளைகுடாவையும் சென்றடைகிறது. அங்கு பவளப்
பாறைகள், கடல்புல் மேடுகள் மற்றும் மாங்க்ரோவ் தீவுகள் பல்வேறு கடல்
உயிரினங்களுக்கான வளமான வாழ்விடங்களை உருவாக்குகின்றன.
இந்த நிலப்பரப்புகளின் வழியாக, கடற்கரைகள், ஈரநிலங்கள், காடுகள் மற்றும்
மலைகள் அனைத்தும் ஒன்றோடொன்று ஆழமாக இணைந்துள்ளன என்பதையும், அவை
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர வாழ்வாதாரமாக உள்ளன என்பதையும் இந்தப்
புத்தகம் விளக்குகிறது.இது வெறும் இயற்கை அழகைக் காட்டும் நூலாக மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின்காட்டு இயற்கை நிலப்பரப்புகளை மீண்டும் அறிந்து கொள்ள அழைக்கும் ஒரு அழைப்பும்ஆகும். அதே நேரத்தில், வருங்கால தலைமுறைகளுக்காக இந்த இயற்கைச் செல்வங்களைபாதுகாப்பது நம்முடைய பொறுப்பு என்பதை நினைவூட்டும் ஒரு நினைவுச்சின்னமாகவும்இந்த புத்தகம் திகழ்கிறது.இந்நிகழ்வில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல்தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா ஆணையர்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப.,அவர்கள், சுகாதார ஆசிரியர் &பியூரோ தலைவர் இந்து குழும்ம் ரம்யா கண்ணன் அவர்கள், சுற்றுலாத்துறை இணை
இயக்குனர் அ. சிவப்பிரியா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர்
. சி. லட்சுமி பிரியா, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாய விலைக் கடையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி,இன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்,சென்னைப்

செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் ‘தகவல் சரிபார்ப்பாளர்களாக’ ஊடகவியலாளர்கள் மாற வேண்டும்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை பத்திரிகை தகவல்

Wildlife Of Tamil Naduபுத்தகம் வெளியிடும் நிகழ்வு

பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாய விலைக் கடையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி,இன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்,சென்னைப்

செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் ‘தகவல் சரிபார்ப்பாளர்களாக’ ஊடகவியலாளர்கள் மாற வேண்டும்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை பத்திரிகை தகவல்