அசாம், கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல், கோவா, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் 5 தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்தது.அசாமில், 126 தொகுதிகளுக்கு 789 வேட்பாளர்களும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கு 985 வேட்பாளர்களும் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு 366 வேட்பாளர்களும் தற்போது களத்தில் உள்ளனர். இடைத்தேர்தல் நடைபெறும் கோவாவின் ஒரு தொகுதியில் 3 வேட்பாளர்களும், கர்நாடகாவில் இரண்டு தொகுதிகளில் 50 வேட்பாளர்களும், நாகாலாந்தின் ஒரு தொகுதியில் 7 வேட்பாளர்களும், திரிபுராவின் 1 தொகுதியில் 6 வேட்பாளர்களும் தற்போது களத்தில் உள்ளனர்.வேட்புமனுக்களைத் திரும்பப் பெற 2026 மார்ச் 26 கடைசி நாளாகும்.

காவல் ஆய்வாளர் தாக்கியதில் விவசாயி கவலைக்கிடம்
🔹🔸காவல் ஆய்வாளர் தாக்கியதில் விவசாயி கவலைக்கிடம் தென்காசி மாவட்டம் சிவகிரியில் புகார் அளிக்கச்சென்ற






