அண்ணா பல்கலை மாணவி வழக்கு: விசாரணையின் பெயரால் செய்தியாளர்களை அச்சுறுத்தும் காவல்துறை நடவடிக்கை ஏற்புடையதல்ல! – எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;பாலியல் வழக்குகளில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற சட்டவிதிகள் உள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்தது பெரும் விவாதமானது. இந்நிலையில், முதல் தகவல் அறிக்கை எப்படி வெளியானது என்பது குறித்து காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சிறப்புப் புலனாய்வுக்குழு, பத்திரிகையாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பி அவர்களிடம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதியும், சட்டத்தை மதித்தும் பத்திரிகையாளர்கள் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து வரும் நிலையில், விசாரணைக்குச் செல்லும் பத்திரிகையாளர்களைச் சிறப்புப் புலனாய்வுக் குழு மணிக்கணக்கில் காக்க வைப்பதாகவும், குற்றவாளிகளைப் போல் நடத்துவதாகவும், தேவையற்ற மற்றும் விசாரணைக்குச் சற்றும் பொருந்தாத கேள்விகளைக் கேட்பதாகவும் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மட்டுமின்றி விசாரணைக்குச் சென்ற சில பத்திரிகையாளர்களின் செல்போன் மற்றும் சில மின்னணுக் கருவிகளைச் சிறப்புப் புலனாய்வுக் குழு பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விசாரணையின் பெயரால் செய்தியாளர்களை அச்சுறுத்தும் காவல்துறையின் இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல.இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள காவல்துறை, தொழில்நுட்ப காரணங்களைக் கூறி தப்பித்துக்கொள்ள நினைக்கும் அதேவேளையில், பொதுவெளியில் காணக்கிடைத்த முதல் தகவல் அறிக்கையை தரவிறக்கம் செய்தவர்களை மட்டுமின்றி, அதனை பார்வேர்டு செய்த அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்துவது பத்திரிக்கை சுதந்திரத்தை மீறும் செயலாகும். அவ்வாறு காவல்துறை செயல்படும்பட்சத்தில், பத்திரிக்கையாளர்களுக்குச் சம்மன் அனுப்பி விசாரிக்கும் காவல்துறை, அந்த தகவல் தன்னிடம் இருப்பதாகவும், முதல் தகவல் அறிக்கையில் இன்னென்ன விசயங்கள் உள்ளது, காவல்துறை முறையாகப் பதிவு செய்யவில்லை என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதுகுறித்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி, பத்திரிக்கையாளர்களைப் போன்று காவல்துறை விசாரிக்குமாகவே, நீதிமன்ற உத்தரவு எனக்கூறி, சட்டத்தை மதித்து விசாரணைக்கு ஒத்துழைக்கும் பத்திரிகையாளர்களை, குற்றவாளிகள் போன்று துன்புறுத்துவதையும், அச்சுறுத்துவதை காவல்துறை உடனே நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு, பத்திரிகையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் இதர மின்னணுக் கருவிகளைத் திரும்ப வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலை மாணவி வழக்கு: விசாரணையின் பெயரால் செய்தியாளர்களை அச்சுறுத்தும் காவல்துறை நடவடிக்கை ஏற்புடையதல்ல! – எஸ்டிபிஐ

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.