அனகாபுத்தூர் தாய் மூகாம்பிகை நகர் பகுதிகளில் இடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார் விசிக தலைவர் திருமாவளவன்..

அனகாபுத்தூர் டோபிகண்ணா தெரு சாந்தி நகர் தாய் மூகாம்பிகை நகர் ஆகிய பகுதிகளில் மக்கள் குடியிருந்து வந்த நிலையில் மக்களின் வீடுகள் சுமார் எழுநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு என்று சொல்லி பல்லாவரம் வருவாய் துறையினரால் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் வீடுகள் இடிக்கப்பட்டன.

இதனை பார்வையிட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வந்து செல்லும் நிலையில் நேற்று தீபாவளியன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் M.P அவர்களும் ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்களும் இடித்து தள்ளப்பட்ட வீடுகளின் இடத்தை பார்வையிட்டார்கள். அப்போது வீடுகளை இழந்த மக்கள் தொல்.திருமாவளவனிடம் நாங்கள் இங்கு சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்தோம் ஆனால் தற்போது நாங்கள் தீபாவளி நாளில் நடுத்தெருவில் நிற்க்கின்றோம். தாங்கள் தான் இதற்க்கான தீர்வினை ஏற்படுத்தி தரவேண்டும் என்று பொதுமக்கள் தங்களின் மன வேதனையை வெளிப்படுத்தினர். அப்போது தொல்.திருமாவளவன் பொதுமக்களுக்கு ஆருதல் கூறினார்.
உடன் மாவட்ட‌ செயலாளர் தேவ அருள்பிரகாசம் அனகாபுத்தூர் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்லாவரம் வடக்கு பகுதி மாவட்ட செயலாளர் ஏழுமலை என்கின்ற திருநீர்மலை தமிழரசன் P.S மாதுவிக்ரமன் மற்றும் அனகாபுத்தூர் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடனிருந்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனகாபுத்தூர் தாய் மூகாம்பிகை நகர் பகுதிகளில் இடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார் விசிக தலைவர் திருமாவளவன்..

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.