இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (12.07.2023) நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2023 ஜூன் 17 ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை ஜெர்மனியில் பெர்லின் நகரில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வீரர் – வீராங்கனைகள் மற்றும் 3 பயிற்றுநர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





