அணணாநகர்:
சமூக சேவகி பெர்னாஸ்கோனி ஜியோவானா அவர்களின் திருவுருவ சிலை திறப்பு விழா சென்னை அண்ணாநகர், வள்ளலார் காலனி பகுதியிலுள்ள இந்திய சமூக நல அமைப்பு (ICWO) தலைமை அலுவலகத்தில் இந்த அமைப்பின் செயலாளர் ஏ.ஜே.ஹரிஹரன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
சமூக சேவகி பெர்னாஸ்கோனி ஜியோவானா திருவுருவ சிலை திறப்பு விழாவில் மனித கடத்தல் விவகாரங்கள் சர்வதேச நிபுணர் டாக்டர்.பி.எம்.நாயர். ஐபிஎஸ் (ஓய்வு) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிலையை திறந்து வைத்து மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் புகழ் மரியாதை செலுத்தினார்.
மேலும் இந் நிகழ்வில் உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் வித்யாகர், அகில இந்திய தெலுங்கு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் டாக்டர்.சி.எம்.கே. ரெட்டி, ஓய்வு பெற்ற பிசியோதெரபிஸ்ட்,(அரசு பிசியோதெரபி கல்லூரி. சென்னை) தேவிகாராணி பிரான்சிஸ், குழந்தைகள் நலக்குழுவின் மத்திய மற்றும் தென் சென்னை தலைவர் -(CWC ) ராஜ்குமார், இந்திய சமூக நல அமைப்பின் (ICWO) தலைவர் எம். பாஸ்கரன்,ஜூபிலி பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் லயன் டாக்டர்.ஆர்.பி.தர்மலிங்கம், குழந்தைகள் நல குழு உறுப்பினர் ஏ.பக்தவச்சலம் மற்றும் சமூக சேவகி ஜெயா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
மேலும் இந்நிகழ்வில் காந்தி நகர் நல அறக்கட்டளையின் குழு உறுப்பினர்கள். வியாசர்பாடி அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் கோல்டன் பிரண்ட்ஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.






