எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு

புதுடெல்லி::
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏப்ரல் 12ம் தேதி, இந்த வழக்கின் விசாரணையின் போது, கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அதிமுக பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தன்னைம அங்கீகரிக்க கோரியது தொடர்பாக 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், 2021 ஆம் ஆண்டு பொதுக் குழுவில் அதிமுகரிவன் ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டோம். இந்த நிலைதான் தற்போதும் தொடர்கிறது. கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் தான் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்பட்டு அதிமுக சட்ட விதிகளுக்கு எதிராக பொதுச் செயலாளராக ஆகியிருக்கிறார். இதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக்கூடாது.
2022ம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இத்னை கருத்தில் கொள்ளாமல் கர்நாடக தேர்தலை சுட்டிக்காட்டி தன்னை பொதுச் செயலராளராக அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுப்பதை ஏற்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட