எதிர்கட்சிகள் கூட்டத்தை பிஆர்எஸ் புறக்கணிப்பு ..?

மத்திய பாஜக அரசுக்கு எதிரான ஒருமித்த கருத்துடைய எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 23ம் தேதி பாட்னாவில் நடக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் தலைமை வகிக்க உள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) பங்கேற்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பிஆர்எஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், எதிர்கட்சிகளின் பாட்னா கூட்டத்தில் பங்கேற்கமாட்டார். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சமமான இடைவெளியை எங்களது கட்சி பின்பற்றும். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைவதால், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் எங்களது கட்சியை விரிவுபடுத்துவதற்கு தடையாக இருக்கும்.

இந்த ஆண்டு டிசம்பரில் தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், காங்கிரஸ் – பாஜகவை சமமான எதிர்கட்சியாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்ற பெயரில் காங்கிரசுடன் இணைந்து பயணிப்பது விவேகமானதாக இருக்காது’ என்றனர். பிஆர்எஸ் கட்சி பாட்னா கூட்டத்தை புறக்கணித்த நிலையில், எதிர்கட்சிகளின் வரிசையில் உள்ள பிஜூ ஜனதா தளமும் புறக்கணித்துள்ளது. மேலும் காங்கிரசுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் மோதல்கள் அதிகரித்துள்ளதால், பாட்னா கூட்டத்தில் திரிணாமுல் பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் மோதல்கள் இருப்பதால் ஆம்ஆத்மியும் பாட்னா கூட்டத்தில் பங்கேற்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகள் கூட்டத்தை பிஆர்எஸ் புறக்கணிப்பு ..?

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.