ஏரிகளில் வளரும் கீரைகளை கொண்டு வருமானம் தேடும் விவசாயிகள் !

ஓசூர்:
ஓசூர் கெலவரப்பள்ளி அணை மதகு சீரமைப்புப்பணி தொய்வு அடைந்துள்ள நிலையில், பாசன பகுதியில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஏரிகளில் முளைத்துள்ள பொன்னாங்கண்ணி கீரையைப் பறித்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு தமிழக எல்லையில் உள்ள ஓசூர் கெலவரப்பள்ளி அணை வழியாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலில் கலந்துவிடுகிறது.

கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 42.28 அடி. அணையின் வலதுபுறம் 22.6 கிமீ தூரமும், இடதுபுறம் 32.5 கிமீ தூரமும் உள்ளது. இதன் மூலம் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு அணை கால்வாய் மூலம் செல்லும் நீர் மூலம் ஏரிகள் நிரம்பி அப்பகுதி விளை நிலங்கள் பாசன வசதி பெற்றுகிறது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கெலவரப்பள்ளி அணை மதகு சீரமைக்கும் பணிக்காக அணையிலிருந்த மொத்த தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. தற்போது வரை சீரமைப்பு பணி நிறைவுபெறாத நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால், பாசனப் பகுதிக்கு நீர் கிடைக்காத நிலையில், சாகுபடி பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வருமானமின்றி வேதனையில் தவிக்கின்றனர். இந்நிலையில், பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, அட்டகுறிக்கி ஆகிய பகுதி விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள ஏரிகளில் வளர்ந்துள்ள பொன்னாங்கண்ணி கீரையைப் பறித்து, நகரப்பகுதியில் விற்பனை செய்து வருவாய் ஈட்டிவருகின்றனர்.

இது தொடர்பாக கெலவரப்பள்ளி அணை பாசன விவசாயிகள் சிலர் கூறியபோது: கெலவரப்பள்ளி அணை நீர் மூலம் பீன்ஸ், முட்டைகோஸ், முள்ளங்கி மற்றும் அனைத்து வகையான கீரைகளும் சாகுபடி செய்து வந்தோம். மதகு சீரமைப்புப் பணியால் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால், எங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக குறைந்தது.

பயிர்களுக்குப் போதிய தண்ணீர் இல்லாததால், சாகுபடி பணியைக் கைவிட்டு, அன்றாட செலவுக்கு வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். வறண்ட ஏரிகளில் வளர்ந்துள்ள பொன்னாங்கண்ணி கீரைகளைப் பறித்து விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறோம். எனவே, பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க கெலவரப்பள்ளி அணை மதகு சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கெலவரப்பள்ளி அணை மதகு சீரமைக்கும் பணிக்காக அணையிலிருந்த மொத்த தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

ஏரிகளில் வளரும் கீரைகளை கொண்டு வருமானம் தேடும் விவசாயிகள் !

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு