கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விளவங்கோடு, கல்குளம், ராஜாக்கமங்கலம், திருவிதாங்கோடு அரசு மேல்நிலை பள்ளிகளில் 2023 ஆகஸ்ட் 28, 30 ஆகிய நாட்களில் அடல் டிங்கரிங் ஆய்வக தத்தெடுப்பு மற்றும் வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக, சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், சென்னை (சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி) மற்றும் சிஎஸ்ஐஆர் சென்னை வளாகம் (சிஎம்சி) இணைந்து ஜிக்யாசா ஏடிஎல் பயிலரங்கத்தை ஏற்பாடு செய்தன.
பயிலரங்கின் போது அறிவியல் விரிவுரைகள் மற்றும் நேரடி விளக்க அமர்வுகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் போது,
எஸ். மகேஸ்வரன், மூத்த முதன்மை விஞ்ஞானி, சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி
ஏ. ராபர்ட் சாம், மூத்த முதன்மை விஞ்ஞானி, சிஎம்சி– சிஎஸ்ஐஓ
டி. கல்பனா, மூத்த முதன்மை விஞ்ஞானி, சிஎம்சி – சிஇசிஆர்ஐ
ஏ.கே. ஃபர்வேஸ் அகமது, முதன்மை விஞ்ஞானி, சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி
எம்.சரவணன், மூத்த விஞ்ஞானி, சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி
ஜே.பிரவின், மூத்த விஞ்ஞானி, சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி
இ. அசோக்குமார், விஞ்ஞானி, சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி
ஆர்.டி. சதீஷ் குமார், முதன்மை தொழில்நுட்ப அதிகாரி, சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி (CSIR-SERC), ஆகியோர் வரிவுரைகளும் நேரடிப் பயிற்சியும் வழங்கினர். இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களும், 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பங்கேற்றனர். முழு நிகழ்வும் எஸ். மகேஸ்வரன் மற்றும் இ.அசோக்குமார் ஆகியோரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.






