சத்துவாச்சாரி மலை பகுதியில் மர்ம முறையில் திடீர் காட்டுத்தீ

வேலூர் :
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வ.உ.சி நகர் அருகே உள்ள ராஜாகோட்டை மலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. வெயிலின் காரணமாக மலையில் காய்ந்திருந்த புற்களால் தீ மள மளவென மலை முழுவதும் பரவியது.
இதனால் வானை முட்டும் அளவிற்கு புகைமண்டலம் சூழ்ந்தது. இதில் புளிய மரம், கொய்யா மரம், வேப்பமரம் மற்றும் ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் எரிந்து நாசமாகின. வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளும், மாடுகளும் மலைப் பகுதியில் உள்ளதால், தீயில் அவைகளும் எரிந்து கருகி இருக்கலாம் என கால்நடை உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர்.
இயற்கையாக தீ ஏற்பட்டதா அல்லது காடுகளுக்கு யாராவது சமூக விரோதிகள் தீ வைத்தனரா ? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தீ வைக்கும் கும்பலை வனத்துறையினர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்துவாச்சாரி மலை பகுதியில் மர்ம முறையில் திடீர் காட்டுத்தீ

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.