சர்வதேச மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட காணொலி செய்தி…

பேரிடரை எதிர்கொள்வதற்கான தாங்குதிறன் உள்கட்டமைப்பு குறித்த 6-வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட காணொலி செய்தி
மேதகு தலைவர்களே, நண்பர்களே, வணக்கம்! உங்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அன்புடன் வரவேற்கிறேன் பேரிடரை எதிர்கொள்வதற்கான தாங்குதிறன் உள்கட்டமைப்பு குறித்த சர்வதேச மாநாட்டின் 6-வது பதிப்பில் நீங்கள் எங்களுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் பங்கேற்பு, இந்த முக்கியமான பிரச்சினையில் உலகளாவிய விவாதங்கள் மற்றும் முடிவுகளை வலுப்படுத்தும்.

நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளில், பேரிடர் தாங்குதிறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமாக உள்ளது. சி.டி.ஆர்.ஐ தொடங்கப்பட்ட 2019-ஆம் ஆண்டிலிருந்து நாம் நீண்ட தூரம் வந்துள்ளோம். இது இப்போது 39 நாடுகள் மற்றும் 7 அமைப்புகளின் உலகளாவிய கூட்டணியாக உள்ளது. இது எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறி.

நண்பர்களே, நாம் அனைவரும் அறிந்தவாறு, இயற்கைப் பேரழிவுகள் அடிக்கடி கடுமையானதாக மாறி வருகின்றன. அவை ஏற்படுத்தும் சேதம் பொதுவாக டாலர்களில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மக்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீதான அவற்றின் உண்மையான தாக்கம் வெறும் எண்ணிக்கையைத் தாண்டியது. பூகம்பங்கள் வீடுகளை அழிக்கின்றன, ஆயிரக்கணக்கான மக்களை வீடற்றவர்களாக்குகின்றன. இயற்கைப் பேரழிவுகள் நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை சீர்குலைத்து, மக்களின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தும். சில பேரழிவுகள் ஆற்றல் சக்திகளை பாதிக்கலாம், இது ஆபத்தான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். இந்த விஷயங்கள் மனிதர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நண்பர்களே, சிறந்த எதிர்காலத்திற்காக தாங்குதிறன் கொண்ட உள்கட்டமைப்பில் நாம் இன்றே முதலீடு செய்ய வேண்டும். புதிய உள்கட்டமைப்பு உருவாக்கத்தில் தாங்குதிறன் காரணியாக இருக்க வேண்டும். மேலும், இது பேரழிவுக்குப் பிந்தைய மறுகட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். பேரழிவுகளுக்குப் பின்னர், உடனடி கவனம் இயல்பாகவே நிவாரணம் மற்றும் மறுவாழ்வு சம்பந்தமான விஷயங்களில் இருக்கும். ஆரம்ப மறுமொழிக்குப் பிறகு, உள்கட்டமைப்பின் தாங்குதிறனிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நண்பர்களே, இயற்கைக்கும் பேரழிவுகளுக்கும் எல்லைகள் இல்லை. மிகவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில், பேரழிவுகள் மற்றும் இடையூறுகள் பரவலான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு நாடும் தனித்தனியாக தாங்குதிறன் கொண்டதாக இருந்தால் மட்டுமே உலகம் கூட்டாக தாங்குதிறனுடன் இருக்க முடியும். பகிரப்பட்ட இடர்கள் காரணமாக பகிரப்பட்ட தாங்குதிறன் முக்கியமானது. சி.டி.ஆர்.ஐ மற்றும் இந்த மாநாடு, இந்தக் கூட்டு பணிக்காக நாம் ஒன்றிணைய உதவுகிறது.

நண்பர்களே, பகிரப்பட்ட தாங்குதிறனை அடைய, நாம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். உதாரணமாக, சிறு தீவு நாடுகள் பேரிடர் அபாயத்தில் உள்ளன. இதுபோன்ற 13 இடங்களில் திட்டங்களுக்கு நிதியளிக்கும் ஒரு முன்முயற்சியை சி.டி.ஆர்.ஐ கொண்டுள்ளது. டொமினிகாவில் தாங்குதிறன்மிக்க வீட்டுவசதி, பப்புவா நியூ கினியாவில் தாங்குதிறனுடன் கூடிய போக்குவரத்து வலையமைப்புகள் மற்றும் டொமினிகன் குடியரசு மற்றும் ஃபிஜியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் முதலியவை சில எடுத்துக்காட்டுகள் ஆகும். சி.டி.ஆர்.ஐ, உலகளாவிய தெற்கிலும் கவனம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களே, இந்தியாவின் ஜி20 தலைமையின் போது, ஒரு முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. விவாதங்களின் மையமாக நிதியுதவியுடன் ஒரு புதிய பேரிடர் அபாய குறைப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டது. சி.டி.ஆர்.ஐ.யின் வளர்ச்சியுடன், இத்தகைய நடவடிக்கைகள் உலகை தாங்குதிறன்மிக்க எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும். அடுத்த இரண்டு நாட்கள் இந்த மாநாடு பயனுள்ள விவாதங்களைக் காணும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நன்றி. மிகவும் நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 63 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 63

பேட்ரிக் ஐ ஜோசப் அடிகளார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

நேற்று இரவு 7:30 மணி அளவில் போரூர் புனித சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை

நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில் தீயணைப்புப் பாதுகாப்பு வசதிகள் குறித்த தணிக்கை நடவடிக்கைகள் மூலம், பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது

பாதுகாப்பு, அதற்கான சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில், ரயில்வே தீயணைப்புப் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், ரயில்வே சொத்துக்களைப் பாதுகாக்கவும், தற்போதைய தீயணைப்புப் பாதுகாப்பு அமைப்புகளை மதிப்பிடுவதையும், மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைக்  கண்டறிவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தத் தணிக்கை நடவடிக்கை, ரயில் நிலையக் கட்டடங்கள், மின்சார அமைப்புகள், குளிர்சாதன, காற்றோட்ட வசதிகள், அவசரக்கால வெளியேறும் வழிகள், தீயணைப்பு உபகரணங்கள், நீர் இருப்பு, பம்பிங் (நீரேற்ற) வசதிகள், ஸ்பிரிங்க்லர் (தானியங்கி நீர் தெளிப்பான்) அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். தீ விபத்துகள் உள்ளிட்ட அவசர நிலைகளை திறம்பட எதிர்கொள்ள ரயில் நிலையங்கள் முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.நிர்ணயிக்கப்பட்ட தீயணைப்புப் பாதுகாப்பு, அதற்கான தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதையும், இந்தத் தணிக்கை மதிப்பிடும். இந்த தணிக்கையின் போது கண்டறியப்படும் குறைபாடுகள் அனைத்தும் உடனடியாக சீர்செய்தல் நடவடிக்கைகள் மூலம் சரிசெய்யப்படும்.பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட கூட்டு ஆய்வுக் குழுக்கள், இந்தத் தணிக்கைகளை மேற்கொள்ளும். தேவைப்படும் இடங்களில், சிறப்பு முகமைகள், மாநில தீயணைப்புத் துறைகளின் உதவியும் நாடப்படும். பாதுகாப்புத் தயார்நிலையை மேலும் வலுப்படுத்த, தணிக்கையின் போது கண்டறியப்படும் மேம்பாட்டுப் பணிகள், முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.ரயில்வே கட்டமைப்பு முழுவதும் பாதுகாப்புச் சூழலைத் தொடர்ந்து மேம்படுத்துவதில், இந்திய ரயில்வே உறுதியுடன் உள்ளது. இந்தத் தீயணைப்புப் பாதுகாப்புத் தணிக்கை முயற்சி, ரயில் நிலையங்களில் பாதுகாப்புத் தரநிலைகளை வலுப்படுத்துவதிலும், அவசரக்காலத் தயார்நிலையை மேம்படுத்துவதிலும், முக்கிய நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

சர்வதேச மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட காணொலி செய்தி…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 63 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 63

பேட்ரிக் ஐ ஜோசப் அடிகளார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

நேற்று இரவு 7:30 மணி அளவில் போரூர் புனித சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை

நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில் தீயணைப்புப் பாதுகாப்பு வசதிகள் குறித்த தணிக்கை நடவடிக்கைகள் மூலம், பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது

பாதுகாப்பு, அதற்கான சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில், ரயில்வே தீயணைப்புப் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், ரயில்வே சொத்துக்களைப் பாதுகாக்கவும், தற்போதைய தீயணைப்புப் பாதுகாப்பு அமைப்புகளை மதிப்பிடுவதையும், மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைக்  கண்டறிவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தத் தணிக்கை நடவடிக்கை, ரயில் நிலையக் கட்டடங்கள், மின்சார அமைப்புகள், குளிர்சாதன, காற்றோட்ட வசதிகள், அவசரக்கால வெளியேறும் வழிகள், தீயணைப்பு உபகரணங்கள், நீர் இருப்பு, பம்பிங் (நீரேற்ற) வசதிகள், ஸ்பிரிங்க்லர் (தானியங்கி நீர் தெளிப்பான்) அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். தீ விபத்துகள் உள்ளிட்ட அவசர நிலைகளை திறம்பட எதிர்கொள்ள ரயில் நிலையங்கள் முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.நிர்ணயிக்கப்பட்ட தீயணைப்புப் பாதுகாப்பு, அதற்கான தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதையும், இந்தத் தணிக்கை மதிப்பிடும். இந்த தணிக்கையின் போது கண்டறியப்படும் குறைபாடுகள் அனைத்தும் உடனடியாக சீர்செய்தல் நடவடிக்கைகள் மூலம் சரிசெய்யப்படும்.பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட கூட்டு ஆய்வுக் குழுக்கள், இந்தத் தணிக்கைகளை மேற்கொள்ளும். தேவைப்படும் இடங்களில், சிறப்பு முகமைகள், மாநில தீயணைப்புத் துறைகளின் உதவியும் நாடப்படும். பாதுகாப்புத் தயார்நிலையை மேலும் வலுப்படுத்த, தணிக்கையின் போது கண்டறியப்படும் மேம்பாட்டுப் பணிகள், முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.ரயில்வே கட்டமைப்பு முழுவதும் பாதுகாப்புச் சூழலைத் தொடர்ந்து மேம்படுத்துவதில், இந்திய ரயில்வே உறுதியுடன் உள்ளது. இந்தத் தீயணைப்புப் பாதுகாப்புத் தணிக்கை முயற்சி, ரயில் நிலையங்களில் பாதுகாப்புத் தரநிலைகளை வலுப்படுத்துவதிலும், அவசரக்காலத் தயார்நிலையை மேம்படுத்துவதிலும், முக்கிய நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.