சர்வதேச மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட காணொலி செய்தி…

பேரிடரை எதிர்கொள்வதற்கான தாங்குதிறன் உள்கட்டமைப்பு குறித்த 6-வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட காணொலி செய்தி
மேதகு தலைவர்களே, நண்பர்களே, வணக்கம்! உங்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அன்புடன் வரவேற்கிறேன் பேரிடரை எதிர்கொள்வதற்கான தாங்குதிறன் உள்கட்டமைப்பு குறித்த சர்வதேச மாநாட்டின் 6-வது பதிப்பில் நீங்கள் எங்களுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் பங்கேற்பு, இந்த முக்கியமான பிரச்சினையில் உலகளாவிய விவாதங்கள் மற்றும் முடிவுகளை வலுப்படுத்தும்.

நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளில், பேரிடர் தாங்குதிறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமாக உள்ளது. சி.டி.ஆர்.ஐ தொடங்கப்பட்ட 2019-ஆம் ஆண்டிலிருந்து நாம் நீண்ட தூரம் வந்துள்ளோம். இது இப்போது 39 நாடுகள் மற்றும் 7 அமைப்புகளின் உலகளாவிய கூட்டணியாக உள்ளது. இது எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறி.

நண்பர்களே, நாம் அனைவரும் அறிந்தவாறு, இயற்கைப் பேரழிவுகள் அடிக்கடி கடுமையானதாக மாறி வருகின்றன. அவை ஏற்படுத்தும் சேதம் பொதுவாக டாலர்களில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மக்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீதான அவற்றின் உண்மையான தாக்கம் வெறும் எண்ணிக்கையைத் தாண்டியது. பூகம்பங்கள் வீடுகளை அழிக்கின்றன, ஆயிரக்கணக்கான மக்களை வீடற்றவர்களாக்குகின்றன. இயற்கைப் பேரழிவுகள் நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை சீர்குலைத்து, மக்களின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தும். சில பேரழிவுகள் ஆற்றல் சக்திகளை பாதிக்கலாம், இது ஆபத்தான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். இந்த விஷயங்கள் மனிதர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நண்பர்களே, சிறந்த எதிர்காலத்திற்காக தாங்குதிறன் கொண்ட உள்கட்டமைப்பில் நாம் இன்றே முதலீடு செய்ய வேண்டும். புதிய உள்கட்டமைப்பு உருவாக்கத்தில் தாங்குதிறன் காரணியாக இருக்க வேண்டும். மேலும், இது பேரழிவுக்குப் பிந்தைய மறுகட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். பேரழிவுகளுக்குப் பின்னர், உடனடி கவனம் இயல்பாகவே நிவாரணம் மற்றும் மறுவாழ்வு சம்பந்தமான விஷயங்களில் இருக்கும். ஆரம்ப மறுமொழிக்குப் பிறகு, உள்கட்டமைப்பின் தாங்குதிறனிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நண்பர்களே, இயற்கைக்கும் பேரழிவுகளுக்கும் எல்லைகள் இல்லை. மிகவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில், பேரழிவுகள் மற்றும் இடையூறுகள் பரவலான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு நாடும் தனித்தனியாக தாங்குதிறன் கொண்டதாக இருந்தால் மட்டுமே உலகம் கூட்டாக தாங்குதிறனுடன் இருக்க முடியும். பகிரப்பட்ட இடர்கள் காரணமாக பகிரப்பட்ட தாங்குதிறன் முக்கியமானது. சி.டி.ஆர்.ஐ மற்றும் இந்த மாநாடு, இந்தக் கூட்டு பணிக்காக நாம் ஒன்றிணைய உதவுகிறது.

நண்பர்களே, பகிரப்பட்ட தாங்குதிறனை அடைய, நாம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். உதாரணமாக, சிறு தீவு நாடுகள் பேரிடர் அபாயத்தில் உள்ளன. இதுபோன்ற 13 இடங்களில் திட்டங்களுக்கு நிதியளிக்கும் ஒரு முன்முயற்சியை சி.டி.ஆர்.ஐ கொண்டுள்ளது. டொமினிகாவில் தாங்குதிறன்மிக்க வீட்டுவசதி, பப்புவா நியூ கினியாவில் தாங்குதிறனுடன் கூடிய போக்குவரத்து வலையமைப்புகள் மற்றும் டொமினிகன் குடியரசு மற்றும் ஃபிஜியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் முதலியவை சில எடுத்துக்காட்டுகள் ஆகும். சி.டி.ஆர்.ஐ, உலகளாவிய தெற்கிலும் கவனம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களே, இந்தியாவின் ஜி20 தலைமையின் போது, ஒரு முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. விவாதங்களின் மையமாக நிதியுதவியுடன் ஒரு புதிய பேரிடர் அபாய குறைப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டது. சி.டி.ஆர்.ஐ.யின் வளர்ச்சியுடன், இத்தகைய நடவடிக்கைகள் உலகை தாங்குதிறன்மிக்க எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும். அடுத்த இரண்டு நாட்கள் இந்த மாநாடு பயனுள்ள விவாதங்களைக் காணும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நன்றி. மிகவும் நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

சர்வதேச மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட காணொலி செய்தி…

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய