சித்திரை திருநாளில் தேசிய தலைவர்கள் தமிழில் வாழ்த்து

புதுடெல்லி:
சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும், சித்திரை திருவிழாவாகவும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த திருநாளை முன்னிட்டு தேசிய தலைவர்கள் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

“தமிழ் புத்தாண்டு திருநாளன்று அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். தமிழ் கலாச்சாரம், சர்வதேச அளவில் புகழ்பெற்றிருப்பதால் உலகம் முழுவதும் இந்த நன்னாள் கொண்டாடப்படுகிறது; வரும் ஆண்டில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருகட்டும்“ என்று தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி அமித்ஷா

தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நம் பெருமையாகும். புத்தாண்டு கொண்டாட்டம் இந்த பெருமையை வலுப்படுத்துவதோடு, உலகெங்கிலுமுள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான கதவுகள் திறக்கட்டும். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

தமிழ் புத்தாண்டு பிறக்கும் இந்நன்னாளில், நம் உள்ளங்களில் ஊற்றெடுக்கும் உவகை, மகிழ்ச்சி, புதிய நம்பிக்கை, எல்லாம் நம் அனைவரின் வாழ்விலும், வளம் மற்றும் நலத்தை வழங்கட்டும். இந்த இனிய தருணத்தில் அனைத்து தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கும் என் அன்பான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

என் அன்புக்குரிய தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சித்திரை திருநாளில் தேசிய தலைவர்கள் தமிழில் வாழ்த்து

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.