தமிழக மருத்துவம் மற்றும் மகக்ள் நல்வாழவுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின் இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் சூர்யகுமார் தீக்காயம் அடைந்து சென்னை ராஜீப்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவை பாராட்டினார். உடன் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.தேரணிராஜன், பேராசிரியர் மரு. ஸ்ரீதேவி, மரு.ஸ்ரீதர், இணை பேராசிரியர்ள் மரு.மகாதேவன் மற்றும் மரு.வெள்ளியங்கிரி, உதவி பேராசிரியர் மரு.ரஷிதாபேகம், செவிலியர் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026னை முன்னிட்டு, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமுலுக்கு






