சென்னை மாநகராட்சி 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இட்லி வடிவமைப்பின் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு…

வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலில்
வாக்காளர்கள் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இட்லி வடிவமைப்பின்
மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் தேர்தல்
விழிப்புணர்வு இட்லி கண்காட்சி நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல்
அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர்
ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள்
இன்று (15.04.2024) மெரீனா கடற்கரையில் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 3 பாராளுமன்றத்
தொகுதிகளிலும், வருகின்ற 19.04.2024 வெள்ளிக்கிழமையன்று
நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிப்பதன் அவசியம்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையிலான
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக,
இன்று மெரீனா கடற்கரையில், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் சிறுதானியத்தினைப் பயன்படுத்தி, மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரம், தேர்தலுக்கான முத்திரை, 100% வாக்குப்பதிவு,
ஓட்டுப்பதிவிற்கான மை வைக்கப்பட்ட விரல் வடிவம் உள்ளிட்ட பல்வேறு
வடிவங்களில் சிறுதானிய இட்லி தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தி விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது. மேலும் இக் கண்காட்சியினைப் பார்வையிட்ட மக்களுக்கு
சுவையான சிறுதானிய இட்லி, குல்பி சாக்லேட் இட்லி வழங்கப்பட்டது.
“சிறுதானிய இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது; தவறாமல் ஓட்டு போட்டா
ஜனநாயகத்துக்கு நல்லது” என்கிற இந்த தேர்தல் விழிப்புணர்வு இட்லி
கண்காட்சியினை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து
மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர்/மத்திய வட்டார துணை
ஆணையாளர் திரு.கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., கூடுதல் மாவட்ட தேர்தல்
அலுவலர் மற்றும் துணை ஆணையர் (கல்வி) திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப.,
இட்லி இனியவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சென்னை மாநகராட்சி 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இட்லி வடிவமைப்பின் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு…

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை