சென்னை வில்லிவாக்கம் கணவன் மனைவி இடையே தகராறில் கத்தியுடன் நபர் ஒருவர் சுற்றி வருவதாக அந்த பகுதி மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வில்லிவாக்கம் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கத்தியோடு இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவருடைய வீட்டில் சோதனை நடத்தியபோது வீட்டிலிருந்த இருந்த டிபன் பாக்ஸ் போலீசார் திறக்க முயன்றனர்.
அப்போது அதில் நாட்டு வெடிகுண்டு இருப்பதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை பிடிக்க முயன்ற போது போலீசார் பிடியில் இருந்து தப்பி சென்றார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை போலீசார் மீண்டும் அதே வீட்டில் சோதனை செய்த பொழுது இரண்டு டிபன் பாக்ஸ்களில் நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.






