ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் ஜூலை 12ம் தேதி துவங்குகிறது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஜூலை 12ம் தேதி துவங்கி 16ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 28 ஆண்கள் 26 பெண்கள் கொண்ட இந்திய அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. உலக தடகள போட்டிக்கான பயிற்சியில் இருப்பதால் நீரஜ் சோப்ரா அவினாஷ் சாப்லே இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டில் இருந்து 7 வீரர்கள் வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.

ஒடிசாவில் சமீபத்தில் நடந்த தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக அணி 9 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. எனவே தான், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






