தனித்தமிழில் பெயர் சூட்டிய 3 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்: பாவலரேறு பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கனார்

சதுரங்கப்பட்டினம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் சதுரங்கப்பட்டினம் ஊராட்சியும் , கல்வி ஒளி நண்பர்கள் குழுவும் இணைந்து ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணி வரை 6.30 வரை கட்டணம் இல்லா திருக்குறள் வகுப்பு மற்றும் தமிழ்ப்பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறது. 11.02.2023 அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் இவ்வகுப்பில் இதுவரை 50 குறட்பாக்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.
இந்த 50 குறட்பாக்களை ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா சதுரங்கப்பட்டினம் நூலக வளாகத்தில் சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய உயர் அதிகாரி முனைவர்.சந்திர சேகரன் மற்றும்வித்யா சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
புதுப்பட்டினம் பாவலரேறு தமிழ்வழி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் தனித் தமிழில் பெயர் சூட்டியுள்ள மூன்று (இலக்கியா , முகிலன் , செந்தமிழன் ) மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தி.சம்பத் குமார் தனது சொந்த (75,000 ரூபாய் மதிப்பில் ) பணத்தில் மூன்று தங்கப்பதக்கம் ( ஒவ்வொன்றும் அரை பவுன் என மொத்தம் ஒன்றரை பவுன் ) வழங்கினார் .
இனி ஒவ்வொரு ஆண்டும் பாவலரேறு பள்ளியில் பயிலும் தனித்தமிழில் பெயர் சூட்டியுள்ள இரண்டு மாணவர்களுக்கும் , சதுரங்கப்பட்டினம் நூலகத்தில் நடைபெறும் திருக்குறள் வகுப்பில் பங்குபெற்று ஆண்டு இறுதியில் நடைபெறும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் இரண்டு மாணவர்களுக்கும் என மொத்தம் நான்கு மாணவர்களுக்கு அரைபவுன் எடையுள்ள நான்கு தங்கப் பதக்கங்களை வழங்க உள்ளதாக தலைமை ஆசிரியர் தி.சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

தனித்தமிழில் பெயர் சூட்டிய 3 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்: பாவலரேறு பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கனார்

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு