பத்திரிக்கை துறையில் நீண்டகாலமாக பணியாற்றி சமூதாய விழிப்புணர்வுக்காக பாடுபட்டு பணியிலிருந்து ஓய்வு பெற்று வறுமை நிலையில் உள்ள பத்திரிக்கையாளர்களி சமூக பணியை கருத்தில் கொண்டு நலிவடைந்த பத்திரிக்கையாளர்களுக்கு நிதி உதவி அளிக்க வகைசெய்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டம் 14.04.1986 முதல் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டபோது மாதம் ரூபாய் 250 வழங்கப்பட்டது . செய்தி துறை அமைச்சர் 2023-24 ஆம் ஆண்டிற்கான சட்ட பேரவை கூட்ட தொடரில் 10.04.2023 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நுரற்றாண்டு முன்னிட்டு பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் மாதம் ரூபாய் 10000 இருந்து ரூபாய் 12000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக இனி பணியிலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் வருமையில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மாத ஓய்வூதியமாக இனி ரூபாய் 12000 பெறுவர்கள் என்பது கூறிப்பிடதக்கது.








