கள்ளக்குறிச்சி:
தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் பி.வெங்கட் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் சிவாபட்டினம் சின்னமருதூர் கிளை சார்பாக சேந்தநாடு எஸ்.ஆர். சிவக்குமார் மற்றும் மாவட்ட முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் பூக்கடை ஜெய்சங்கர், ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளர் றி.பசுபதி ராமச்சந்திரன், சிவாபட்டினம் சின்ன மருதூர் கிளை செயலாளர் குமரேசன், அய்யனார், கார்த்திகேயன், ராமகிருஷ்ணன், மாயகிருஷ்ணன், கஜேந்திரன், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திமுக நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கை 110-ஆக அதிகரிப்பு; பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
சென்னை:தமிழகத்தில் இருக்கும் 234 சட்டமன்றத் தொகுதிகளை 110 மாவட்ட கழகங்களாக பிரித்து தி.மு.க






