கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரம் சமூக நீதி மாணவர் இயக்கம் எஸ்.எம். ஐ. சார்பாக தேசிய கல்வி நாளை முன்னிட்டு சமூக நீதி மாணவர் இயக்கம் எஸ்.எம்.ஐ. கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் அரசு மருத்துவமனையில் இருக்கின்ற நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி எஸ்.எம். ஐ.நகர செயலாளர் முஹம்மது ஆதில் தலைமையில் மமக நகர செயலாளர் அபுதாய்ரு, தமுமுக மமக நகர பொருளாளர் யாசர் அரபாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் இயக்க கொடியை எஸ்.எம்.ஐ முன்னாள் மாவட்ட செயலாளர் அல் ஆரிப். கொடி ஏற்றி வைத்தார் .இந்த நிகழ்ச்சியில் தமுமுக,மமக மாவட்டத் தலைவர் ஜிஸ்தி முஹம்மது சிறப்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாவட்ட செயலாளர் நவாஸ் கான், மமக மாவட்டச் செயலாளர் அபூபக்கர் சித்திக், தமுமுக,மமக மாவட்ட பொருளாளர் முஹம்மது அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இதில் மமக மாவட்ட துணை செயலாளர் சபிக், சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர், மருத்துவ சேவை அணி முன்னாள் மாவட்ட செயலாளர் ரிபாய் கான், முன்னாள் நகர தலைவர் பைரோஸ் காஜா, எஸ்.எம்.ஐ.நகர துணை செயலாளர்கள் அபூபக்கர், முஜிப் ரகுமான் மற்றும் எஸ்.எம்.ஐ. நிர்வாகிகள், தமுமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






