நத்தம் அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கிய காளையர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அய்யாபட்டியில் காளியம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி, அங்குள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதனை திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதன்பின்னர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்த காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, கோபால்பட்டி, கொசவபட்டி தவசிமடை நத்தமாடிப்பட்டி, சொரிப்பாறைப்பட்டி, அலங்காநல்லூர் பாலமேடு ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 300 காளைகள் ஜல்லிக்கட்டில் களம் இறங்கின. மாடுபிடி வீரர்கள் 100 பேர் குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்குவதற்கு வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது. துள்ளிக்குதித்த காளைகளை அடக்க காளையர்கள் மல்லுக்கட்டினர். வீரர்களிடம் சிக்காமல் சில காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. பல காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு மடக்கி பிடித்து அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், நாற்காலி, சைக்கிள், பீரோ, எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங் கள், வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக் கட்டு நிகழ்ச்சியை திண்டுக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங் களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார், நத்தம் தாசில்தார் சுகந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை அய்யாபட்டி கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நத்தம் அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கிய காளையர்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.