ஸ்ரீஹரிகோட்டா:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 14-ம் தேதி எல்.வி.எம்.-3-எம் -4 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. முதலில் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 3 பின்னர், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.
இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டது. கடந்த 1-ம் தேதி புவி வட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த சந்திரயான் -3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதை நோக்கிய பயணத்தை தொடங்கியது. கடந்த 5-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.
நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலம், அதிகபட்சம் 18 ஆயிரம் கிலோ மீட்டராகவும், குறைந்தபட்சம் 100 கிலோ மீட்டர் என்ற அளவிலும் நிலவு சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. இந்நிலையில், சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரத்தை குறைக்கும் முதற்கட்டப்பணி நேற்று இரவு நடைபெற்று வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இதன் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் அருகே சென்றுள்ளது. அடுத்தகட்டமாக சுற்றுவட்டப்பாதை தூரத்தை குறைக்கும் பணி வரும் 9ம் தேதி மதியம் 1 மணி முதல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் அருகே சுற்றி வரும் வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரயான் – 3 விண்கலத்தை வரும் 23ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்க இஸ்ரோ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





