பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-149க்குட்பட்ட வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் மயானபூமியின் எரிவாயு (Gasifier) தகனமேடையினை திரவ பெட்ரோலிய வாயு (LPG) தகனமேடையாக மாற்றம் செய்ய பணிகள் நடைபெற உள்ளதால், 10.05.2023 முதல் 09.07.2023 வரை 60 நாட்களுக்கு மேற்கண்ட மயானபூமியில் உடல்களை தகனம் செய்ய இயலாது.
எனவே, மேம்பாட்டு பணிகள் நடைபெறும் 10.05.2023 முதல் 09.07.2023 வரையிலான நாட்களுக்கு உடல்களை எரியூட்டுவதற்கு பொதுமக்கள் அருகிலுள்ள போரூர், விருகம்பாக்கம் மற்றும் நெசப்பாக்கம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது.






