மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அண்ணா நகர் மண்டலம், புல்லா அவென்யூவில் தேசிய நகர்புற சுகாதார திட்ட நிதி ரூ.13 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்புற சமுதாய சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம். கே. மோகன், கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மருத்துவர் டி.சி.செல்வவிநாயகம், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாமன்ற உறுப்பினர் திருமதி்.மெட்டில்டா கோவிந்தராஜ், மண்டல அலுவலர் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





