தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளுடன் 71 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சிறப்பு மருத்துவமனைக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.« க.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், துணை மேயர் மு.மகேஷ்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குனர் டாக்டர் எஸ்.உமா, மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் சாந்திமலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





