பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட சதாசிவம் நகர், 3வது குறுக்குத் தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





