மான் இறைச்சி வைத்திருந்த தந்தை,மகனுக்கு அபராதம்-வனத்துறை நடவடிக்கை…

ருமபுரி மாவட்டம் பென்னாகரம் சரகத்தில் மான் இறைச்சி வைத்திருந்த இருவருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். பென்னாகரம் வனச் சரகத்துக்கு உட்பட்ட சிடுவம்பட்டி அடுத்த புதுக்காடு கிராமத்தைச் சேர்ந்த அல்லிமுத்து(55), அவர் மகன் சேகர்(33) ஆகியோர் வீட்டில் மான் இறைச்சி வைத்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு உத்தரவின் பேரில் வனத்துறைக்கான சிறப்புப் படையும் பென்னாகரம் வனச் சரகர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினரும் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அல்லிமுத்து, சேகர் ஆகிய இருவரும் ஆடு மேய்க்க வனப்பகுதிக்கு சென்றபோது மான் ஒன்று இறந்து கிடந்ததாகவும், அதை எடுத்து வந்து இறைச்சி வத்தல் தயாரித்து வீட்டில் வைத்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். அதைத் தொடர்ந்து இருவரையும் வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் முன்பு ஆஜர்படுத்தினர். அவர், இருவருக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதித்ததுடன், கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மான் இறைச்சி வைத்திருந்த தந்தை,மகனுக்கு அபராதம்-வனத்துறை நடவடிக்கை…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.