இன்று (27.03.2026) சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கில் கணினி குலுக்கல் முறையில் சுழற்சிக்கு முதல் சமவாய்ப்பிற்கு உட்படுத்தப்பட்ட (Randomization) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர்கள் தாம் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்கள் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக அனுப்பப்படும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்வில் கூடுதல் மாவட்ட தேர்தல்/இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர்கள் விஜய்பாபு, நா. பூஷ்ணாதேவி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கில் கணினி குலுக்கல் முறையில் சுழற்சி
இன்று (27.03.2026) சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கில்





